ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் இந்தியா முழுமைக்கும் சுமார் 45 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒருவரது கணக்கில் எவ்வளவு பணம் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரியாது. வங்கிகள் எளிதில் திவாலாகாது என்றாலும், வங்கிகள் திவாலானதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அண்மையில், இதேபோன்ற ஒரு நிலை யெஸ் வங்கிக்கு ஏற்பட்டு வங்கி திவாலாகும் நிலை ஏற்பட்டது. வங்கிகள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.