மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிஐபி சமூக ஊடகங்களில் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஏடிஎம்கள் மூலம் 500 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 90% ஏடிஎம்கள் மார்ச் 31, 2026க்குள் 500 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை நிறுத்திவிடும் என்றும், இதில் 75% பணிகள் செப்டம்பர் 30-க்குள் முடிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.