சம்பளம், ஓய்வூதியம் உயர்வு! மத்திய அரசு DA உயர்வால் கணக்கு மாறுது
டிஏ உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். எவ்வளவு தொகை உயரும் என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.
டிஏ உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். எவ்வளவு தொகை உயரும் என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசு சமீபத்தில் 2% சதவீதம் DA உயர்வு செய்துள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களின் DA 53% இருந்து 55% ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் நாட்டின் 65 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.
DA உயர்வால் மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் உயரும். ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 19000 ரூபாய் என்றால், 2% DA உயர்வால் மாதம் 380 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் அடிப்படை ஓய்வூதியம் 8000 ரூபாய் என்றால், மாதம் 160 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
மத்திய அரசு ஜனவரி மாதத்தில் எட்டாவது ஊதியக் கமிஷனை பரிந்துரை செய்துள்ளது. எட்டாவது ஊதியக் கமிஷன் 2026 ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று பலர் நினைக்கிறார்கள்.
மத்திய அரசு வட்டாரங்களின் தகவல் படி எட்டாவது ஊதியக் கமிஷன் 2027 முதல் அமலுக்கு வரும். 2026-ல் அறிக்கை சமர்ப்பிக்கும்.
எட்டாவது ஊதியக் கமிஷன் அமலுக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 51 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி