Cash Rule: வீட்டில் அவசரத் தேவைக்காக கொஞ்சம் ரொக்கம் வைத்திருப்பது பல குடும்பங்களின் வழக்கம். வீட்டில் வைத்திருக்கும் பணத்துக்கு “இவ்வளவு ரூபாய்க்கு மேல் வைத்தால் உடனே வருமான வரி பிரச்சினை” என்ற தகவல் பரவி வருகின்றன. இது உண்மையா என்பதை பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ, இணைய வங்கி, அட்டை உள்ளிட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டாலும், அவசரத் தேவைக்காக வீட்டில் கொஞ்சம் ரொக்கம் வைத்திருப்பது இயல்பான விஷயமாகவே உள்ளது. குறிப்பாக ஏடிஎம் வசதி குறைவாக உள்ள பகுதிகளில் அல்லது இணைய வசதி பாதிக்கப்படும் சூழ்நிலைகளில் கையில் பணம் இருப்பது உதவியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் வைத்திருக்கும் பணத்துக்கு ஒரு குறிப்பிட்ட “சட்டபூர்வ அதிகபட்ச வரம்பு” உள்ளது என்று பொதுவாக கூற முடியாது.
25
பணத்தின் அளவைவிட அதன் மூலம் முக்கியம்
ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் காட்டிலும், அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை விளக்கக்கூடிய பதிவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, வங்கியில் இருந்து முறையாக எடுத்த பணம் அதற்கான வங்கி கணக்கு பதிவுகள், தொழில் வருமானம் என்றால் கணக்கு மற்றும் வருமானப் பதிவுகள், விவசாய வருமானம் போன்றவற்றுக்கு உரிய ஆவணங்கள் இருப்பது உதவும். கணக்கில் காட்டப்படாத பணத்துக்கு உரிய விளக்கம் இல்லாதபோது பிரச்சினைகள் உருவாகலாம்.
35
வீட்டில் பணம் வைத்திருப்பது மட்டும் குற்றமல்ல
வீட்டில் ரூ.10 லட்சம் வைத்திருந்தால் கைது அல்லது ரூ.5 லட்சத்துக்கு மேல் வைத்தால் வருமான வரித்துறை பறிமுதல் செய்யும் போன்ற பொதுவான தகவல்களை அப்படியே நம்ப வேண்டாம். பணத்தை வைத்திருப்பதற்கான ஒரே ஒரு பொதுவான உச்சவரம்பைச் சுட்டிக்காட்டுவது தவறாகும். ஆனால் வருமான வரி அதிகாரிகளின் சோதனை போன்ற சூழ்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட பணத்தின் மூலத்தையும் சட்டபூர்வமான தன்மையையும் விளக்குவது முக்கியமாக இருக்கலாம்.
வேலை இழப்பு, மருத்துவச் செலவு போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் அவசர நிதி வைத்திருப்பது நல்ல நிதி பழக்கம் என்று பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி குறிப்பிடுகிறது. ஆனால் அந்த முழுத் தொகையையும் வீட்டில் ரொக்கமாக வைத்திருக்க வேண்டும் என்பதில்லை. வங்கி சேமிப்புக் கணக்கு போன்ற எளிதில் அணுகக்கூடிய முறைகளையும் பயன்படுத்தலாம். உங்கள் தேவைகள் மற்றும் பணத்தின் அணுகல் வசதியை கருத்தில் கொள்ள வேண்டும்.
55
எவ்வளவு பணம் வீட்டில் வைத்திருப்பது சரி?
இதற்கு எல்லா குடும்பங்களுக்கும் பொருந்தும் ஒரே தொகை கிடையாது. குடும்பத்தின் தினசரி செலவு, மருத்துவத் தேவைகள், வசிக்கும் இடத்தில் உள்ள வங்கி மற்றும் ஏடிஎம் வசதி, அவசர சூழ்நிலைகளில் பணம் தேவைப்படும் அளவு ஆகியவற்றைக் கொண்டு சிறிய இருப்பை வைத்திருக்கலாம். அதே நேரத்தில், பெரிய தொகையை நீண்ட காலம் வீட்டில் வைத்திருப்பதால், தீ விபத்து மற்றும் பணவீக்கத்தால் வாங்கும் சக்தி குறைதல் போன்ற ஆபத்துகள் உள்ளன. எனவே தேவைக்கான ரொக்கம் மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை பாதுகாப்பான நிதி வழிகளில் நிர்வகிப்பது நடைமுறைக்கு ஏற்ற அணுகுமுறையாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.