இதுதான் தற்போது கவனம் பெற்றுள்ள கணக்கு. மத்திய அரசு ஊழியர்களின் தற்போதைய ஊதிய அமைப்பில் லெவல் 7-ன் ஆரம்ப அடிப்படை சம்பளம் ரூ.44,900.
Moneycontrol வெளியிட்ட கணக்கீட்டில், 8வது ஊதியக்குழுவில் 3 மடங்கு (3x) ஊதியப் பெருக்குக் காரணி பயன்படுத்தப்பட்டால், இந்த அடிப்படை சம்பளம்:
ரூ.44,900 × 3 = ரூ.1,34,700
என உயரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு தற்போதுள்ள 30% எக்ஸ் வகை HRA விகிதத்தை பயன்படுத்தினால்:
ரூ.1,34,700 × 30% = ரூ.40,410
அதாவது, இந்த கணக்கீட்டின்படி எக்ஸ் நகரத்தில் பணிபுரியும் லெவல் 7 ஊழியருக்கு மாதம் ரூ.40,410 HRA கிடைக்கலாம். ஆனால் இது அதிகாரப்பூர்வ புதிய HRA அல்ல. 3x ஊதியப் பெருக்குக் காரணி மற்றும் தற்போதைய HRA விகிதம் தொடரும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலான கணக்கு மட்டுமே.
இதையும் படிங்க : Panchagraha Rajayoga : மகாலட்சுமி அருளும், பஞ்சகிரக ராஜயோகமும் சேர்ந்து ஜாக்பாட் அடிக்கப் போகும் 5 ராசிகள்!