கிழிந்த ரயில் டிக்கெட் செல்லுமா? இந்தியன் ரயில்வே விதியை தெரிஞ்சுக்கோங்க

Published : May 10, 2025, 10:16 AM IST

அனைவரும் ரயில் டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் அதை பாக்கெட்டில் வைப்பதிலோ, பர்ஸில் வைப்பதிலோ எடுப்பதிலோ தவறுதலாக கிழிந்துவிட்டால் அது செல்லுமா இல்லையா? என்பது குறித்து தெரியவில்லை. இதுதொடர்பான இந்தியன் ரயில்வே விதிகளை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

PREV
15
கிழிந்த ரயில் டிக்கெட் செல்லுமா? இந்தியன் ரயில்வே விதியை தெரிஞ்சுக்கோங்க
Torn Train Ticket Rules

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது சட்டப்படி குற்றம். அதனால் எல்லோரும் டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் அதை பாக்கெட்டில் வைப்பதிலோ, பர்ஸில் வைப்பதிலோ எடுப்பதிலோ தவறுதலாக கிழிந்துவிட்டால் அது செல்லுமா இல்லையா? இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்தவர்களும் இருப்பார்கள். ஆனால் பலர் டிக்கெட் செல்லாது என்று அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று வேறு டிக்கெட் எடுப்பார்கள். இப்படி செய்யத் தேவையில்லை, கிழிந்த டிக்கெட்டும் செல்லும்.

25
இந்தியன் ரயில்வே விதிகள்

ஆனால் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். அவை என்னவென்று இப்போது பார்ப்போம். நீங்கள் வாங்கிய டிக்கெட் தவறுதலாகக் கிழிந்துவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அது செல்லும். ஆனால் அந்த டிக்கெட் கிழிந்தாலும் அதில் உள்ள விவரங்களைப் படிக்க முடியும். அதாவது டிக்கெட் எண், எங்கிருந்து எங்கு செல்கிறீர்கள்? டிக்கெட் கட்டணம், முத்திரை சின்னம் சரியாகத் தெரிய வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று சரியாக இல்லை என்றால் அதிகாரிகள் டிக்கெட்டை ஏற்க மாட்டார்கள்.

35
டிக்கெட் கிழிந்தால் என்ன செய்வது?

அது வேலை செய்யாது என்று சொல்லிவிடுவார்கள். இதனால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். டிக்கெட் வெறும் ஒரு காகிதம். அதனால் அது எந்தச் சூழ்நிலையிலும் கிழிந்து போக வாய்ப்புள்ளது. அதனால் டிக்கெட் வாங்கியவுடன் முக்கியத் தகவல்கள் தெரியும்படி புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது டிக்கெட் கிழிந்தாலும் நகல் உங்களிடம் இருப்பதால் இரண்டையும் பார்த்து டிடிஇ உங்களுக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுவார்.

45
ரயில் டிக்கெட் ரூல்ஸ்

இப்போதெல்லாம் டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பதால் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது நல்லது. தவறுதலாக டிக்கெட் நீக்கப்பட்டாலும் ரயில்வே இணையதளத்திலும், செயலியிலும் பாதுகாப்பாக இருக்கும். அதை மீண்டும் எடுத்தால் போதும்.

55
ரயில்வே அபாரதங்கள்

டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யவேண்டாம். அபராதம் கட்டினால் போதும் என்று நினைத்தீர்களா? சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். ஏனென்றால் சில சமயங்களில் அபராதத்துடன் சிறைத்தண்டனையும் கிடைக்கலாம். பொது டிக்கெட்டுடன் செல்வதற்கு ஆயிரக்கணக்கில் அபராதம், இரண்டு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை வரை வாங்கிக் கொள்வது அவசியமா?

Read more Photos on
click me!

Recommended Stories