மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. மகளின் திருமணத்திற்கு நகை சேர்க்க நினைத்தவர்கள், “சின்ன செட் போதும்” என சமாதானம் செய்து கொள்ளும் நிலை. சிலர் பழைய நகைகளை மாற்றி வேலை வாங்குவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். நகைக்கடைகளிலும் முன்பை போல கூட்டம் இல்லாமல், விசாரித்து செல்லும் வாடிக்கையாளர்களே அதிகம்.
தங்கம் விலை உயர்வு என்பது சந்தையின் இயல்பான மாற்றமாக இருந்தாலும், அதன் தாக்கம் நேரடியாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களையே அதிகம் பாதிக்கிறது. “தங்கம் வாங்குவது கனவாகி விட்டதே” என்ற ஏக்கம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. விலை நிலைபெறும் நாள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்போடு, பல குடும்பங்கள் தங்கள் ஆசைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டிய சூழலில் சிக்கியுள்ளன.