தற்போது சந்தையில் அதிகபட்ச வட்டி வழங்கும் வங்கிகளின் வரிசை இதுதான்:
1) சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை தலா 8.10% வட்டியுடன் முதலிடத்தில் உள்ளன.
2) இவற்றுக்கு அடுத்தபடியாக, ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7.80% வட்டி வழங்குகிறது.
3) ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7.77% வட்டியையும், ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7.75% வட்டியையும் வழங்கி வருகின்றன.
4) அதேசமயம், பாங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் 6.70% வட்டியையும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.65% வட்டியையுமே வழங்குகின்றன.
இந்த பெரும் வித்தியாசமே முதலீட்டாளர்களை சிறு நிதி வங்கிகளை நோக்கி ஈர்க்கிறது.
நீண்ட கால முதலீட்டில் பெரிய லாபம்!
வட்டி விகிதத்தில் கிடைக்கும் இந்த 1% கூடுதல் வருமானம் என்பது சிறிய விஷயமாகத் தெரியலாம். ஆனால், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பெரிய தொகையை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும்போது, இந்த 1% வித்தியாசம் முதிர்வு காலத்தில் உங்கள் கையில் கிடைக்கும் தொகையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.