பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா 2026-ஐச் சுற்றி மீண்டும் பேசப்படுவது அதிகரித்துள்ளது. அவர் கூறியதாக பரவி வரும் தகவல், உலகம் பெரிய பொருளாதார அதிர்வை சந்திக்கலாம் என்பதே முக்கிய கருத்து. வேலைவாய்ப்புகள் குறையலாம், பணத்தின் மதிப்பு அழுத்தத்திற்கு உள்ளாகலாம், வங்கி அமைப்புகளில் நம்பிக்கை தளரலாம் என்பதும் இதில் இடம் பெறுகிறது. குறிப்பாக, காகித நாணயம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் குழப்பங்கள் உருவாகலாம் என்ற கணிப்பே மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கிறது.