மேலும், மத்திய சர்வர் இணைப்பு தேவையில்லாமல் ‘ஆப்-டு-ஆப்’ சரிபார்ப்புக்கான புதிய மொபைல் ஆப் சோதனை நிலையில் உள்ளது. இது விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், கடைகள் போன்ற இடங்களில் எளிதாகப் பயன்படும். ஆதார் ஆவணங்களை காகித வடிவில் கையாளும் போது ஏற்படும் அபாயங்கள் குறையும், தரவு பாதுகாப்பு மேம்படவும் இந்த அமைப்பு உதவுகிறது என்று UIDAI கூறுகிறது.
இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் தங்கள் முகவரிகளை புதுப்பிக்கவும், மொபைல் போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் சேர்க்க முடியும். எனவே, இத்தகைய டிஜிட்டல் சரிபார்ப்பு முறை பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் வசதியை மேம்படுத்துவது ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.