செப்டம்பர் 2023-ல் வெறும் ரூ.2.22-லிருந்து தற்போது ரூ.138 ஆக உயர்ந்து, 6000% மேல் வருமானம் தந்துள்ளது. இருப்பினும் பங்குச்சந்தை முதலீடுகள் அபாயங்கள் நிறைந்தவை என்பதால் எச்சரிக்கை அவசியம்.
இந்திய பங்குச்சந்தையில் சில சமயம் மிகச்சிறிய விலையில் கிடைக்கும் பங்குகள் கூட முதலீட்டாளர்களுக்கு அபாரமான செல்வம் உருவாக்கி தருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணமாக Diamond Power Infrastructure நிறுவனத்தின் பங்கு குறிப்பிடப்படுகிறது. 2023 செப்டம்பர் மாதத்தில் வெறும் ரூ.2.22 என்ற அளவில் வர்த்தகமான இந்தப் பங்கு, தற்போது ரூ.138 அளவுக்கு உயர்ந்த முதலீட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
25
சிறப்பாகச் செயல்படும் பங்கு
மின்கம்பிகள் மற்றும் உயர் மின்னழுத்த கேபிள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், மின்உற்பத்தி, மின்பரிமாற்றம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் முக்கிய பங்காகிறது. ரூ.7,000 கோடி கடந்த மார்க்கெட் கேப்புடன் சிறிய அளவிலான நிறுவனமாக இருந்தாலும், ஆர்டர் புத்தகம் மற்றும் வருமான வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வந்துள்ளது.
35
டயமண்ட் பவர் பங்கு
2023 முடிவில் மட்டும் 600% க்கும் அதிகமான வளர்ச்சி இந்த பங்கு, அடுத்த ஆண்டு மேலும் 800% வரை உயர்ந்தது. இடையில் சிறிய அளவிலான லாபம்பெறுதல் காரணமாக சற்று சரிவு ஏற்பட்டாலும், மீண்டும் நிலைபெற்று வர்த்தகம் நடைபெற்றது.
2023 செப்டம்பரில் ரூ.1 லட்சம் முதலீடு செய்த ஒருவர், இன்றுவரை வைத்திருந்தால் சுமார் ரூ.62 லட்சம் மதிப்பாக உயர்ந்திருக்கும் என கணக்கிடப்படுகிறது. இது 6,000% க்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது.
55
பங்குச் சந்தை வருமானம்
இருப்பினும், பங்குச்சந்தை முதலீடுகள் எப்போதும் அபாயம் உடையவை. கடந்த வளர்ச்சிக்கான எதிர்கால உத்தரவாதம் அல்ல என்பதால், முதலீடு செய்வதற்கு முன் நிதி ஆலோசகரை அணுகுவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.