பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. பிக்பாஸ் மேடையில் அவ்வப்போது அரசியல் பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ள கமல், நேற்று பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய பின்னர், பிக்பாஸ் வீட்ல மட்டுமில்ல, நாட்லையும் பெண்களுக்கு எதிராக ஏதாவது நடந்ததென்றால் தட்டிக்கேட்பேன் என கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கமல் தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பிரதீப்பை பலிகடா ஆக்கிவிட்டதாக சாடி வருகின்றனர்.
மேலும் மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளிக்காத கமல் அரசியலுக்கு சுத்தமாக லாயக்கு இல்லாதவர் என்றும் விமர்சித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவனை பேசவே விடாமல் மக்களுக்கு கேட்க நேரமில்லை என்று சொன்னபோதே இதில் அரசியல் இருப்பது உறுதியானதாக தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். மறுபுறம் பிரதீப்புக்கு ஆதரவாகவும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. கமலின் இந்த முடிவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி-க்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஒன்னு அவன் இருக்கனும்... இல்ல நான் இருக்கனும்! பிரதீப்பால் பிக்பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த கமல்ஹாசன்