அட்வைஸ் பண்ணியது குத்தமா... கமல்ஹாசனை போடா வாடானு பேசி அசிங்கப்படுத்தினாரா அசீம்? - வீடியோவால் வெடித்த சர்ச்சை

First Published Feb 12, 2023, 10:42 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை ஜெயித்த பின்னர் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வரும் அசீம், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கமலை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் அசீம் தான் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு ரூ.50 லட்சம், பிக்பாஸ் டைட்டில் மற்றும் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவுகளுடன் இருக்கும் போட்டியாளர்கள் வெளியே வந்ததும் நண்பர்களாகிவிடுவார்கள். இதுதான் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் நடந்துள்ளது.

ஆனால் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான் வெளியே வந்தும் சண்டை போட்டு வருகின்றனர். குறிப்பாக அந்நிகழ்ச்சியின் இரு பைனலிஸ்ட்களான விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவர் பின்னும் ஒரு குழுவாக பிரிந்து போட்டியாளர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ரசிகர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு இவர்களது மோதல்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் அசீமுக்கு தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஃபேன்ஸ் மீட் ஒன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்ட அசீமுக்கு, அவரைப்பற்றிய மீம்கள் ஒவ்வொன்றாக போடப்பட்டது. அப்படி எனக்கு என் பையன் தான் சார் எல்லாமே என குறிப்பிட்டு, அசீம் அவரது மகனை எந்த அளவு நேசிக்கிறார் என்பதை விவரிக்கும் வண்ணம் போடப்பட்ட ஒரு மீம் காட்சிப்படுத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் யானை உடன் புகைப்படம் எடுத்த ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி!

இதைப்பார்த்ததும், எனக்குப் என் பையன் தான் எல்லாமே என சொல்வது உண்மைதான். ஷோவில் இப்படி கோபப்படுகிறீர்களே, இதைப்பார்த்து உங்க மகன் என்ன நினைப்பாருனு கேக்குறாங்க. ஏன்டா, என் மகன் கூட நான் நேரம் செலவழிக்க எனக்கு பல ஆயிரம் நாள் இருக்குடா. அந்த ஷோ பார்த்து தான் என் பையன் வளரனும்னு அவசியம் இல்ல என கோபமாக பேசி இருந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், அசீம் கமலை தான் இவ்வாறு ஒருமையில் பேசி இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது, அசீம் சண்டையிட்டதை கண்டித்த கமல், உங்கள் மகனும் இந்த ஷோவை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அவருக்காக நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கூறி இருந்தார். அப்போது அமைதியாக இருந்துவிட்டு, தற்போது வெளியே வந்ததும், கமலை அசிங்கப்படுத்தும் விதமாக அவர் பேசி உள்ளதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். இவ்ளோ தைரியம் உள்ள நீங்க கமல் அப்போ சொன்னப்பையே பேசி இருக்க வேண்டியது தானே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ராம்சரண் உடன் சேர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆனந்த் மஹிந்திரா

click me!