பெட்ரோல் பங்குகளில் எப்படி மோசடி நடக்கிறது?
இதற்கு முக்கிய காரணம் மக்களின் அலட்சியமும், ஊழியர்களின் தந்திரமும்தான். பெட்ரோல் நிரப்பும்போது எத்தனை முறை மீட்டரை சரிபார்க்கிறீர்கள்? ரசீது கேட்கிறீர்களா? அடர்த்தி, இன்றைய விலை பார்க்கிறீர்களா? உங்கள் பழக்கங்களை ஊழியர்கள் சாதகமாக்குகிறார்கள். பலர் அவசரமாக இருப்பார்கள், சிலர் வண்டியை விட்டு இறங்க மாட்டார்கள். அவர்கள் மீட்டரை பூஜ்ஜியத்தில் தொடங்க மாட்டார்கள், பழைய விலையில் எரிபொருள் நிரப்புவார்கள், அல்லது குறைவாக கொடுத்து முழு பணம் வாங்குவார்கள்.