வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, சியாராவின் உற்பத்தியை உயர்த்த டாடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் மாதத்திற்கு 7,000 யூனிட்கள் தயாரிக்க இலக்கு வைத்திருந்த நிறுவனம், தற்போது அதை 12,000 முதல் 15,000 யூனிட்கள் வரை உயர்த்தியுள்ளது. இன்ஜின் விருப்பத்தில், 1.5 லிட்டர் டீசல் மாடல் பல வேரியன்ட்களில் கிடைக்கிறது; சில டிரிம்களில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் DCA கியர்பாக்ஸ் தேர்வுடன் வருகிறது. டர்போ-பெட்ரோல் மாடல் உயர் வேரியன்ட்களில் மட்டுமே, அதுவும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகிறது.