இந்த முயற்சி வாகனத் துறையைக் கடந்து விவசாயத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கரும்பு, சோளம் உள்ளிட்ட வேளாண் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் காற்று மாசுபாடு மற்றும் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் முயற்சிக்கும் இது துணை நிற்கும் என்பதால், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்தில் இந்த கார் ஒரு முக்கிய திருப்பமாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.