கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் புதுமையாக சிந்திப்பவர்கள். இவர்களின் தனித்துவமான கண்ணோட்டம், கூர்மையான அறிவுத்திறன், தொலைநோக்குப் பார்வை ஆகியவை பகுப்பாய்வு செய்யும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. கும்ப ராசிக்காரர்கள் எந்த ஒரு பணியையும் தீவிரமாகவும், பொறுப்புணர்வாகவும் அணுகுவார்கள். இவர்களின் ஆதாரங்களை மதிப்பிடும் திறன், நடைமுறை ஆகியவை புதிர்களை அவிழ்க்க உதவுகிறது.
இவர்கள் எப்போதும் ஒரு படி முன்னால் நின்று சூழலை முழுமையாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் ஒருவரின் மர்மத்தை பல கண்ணோட்டங்களில் பார்க்கும் திறன் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் ஒரு நபரை பார்த்த உடனேயே அவர்கள் குறித்த ஒரு மேம்போக்கான புரிதலை ஏற்படுத்தி, அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து விடுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)