விருச்சிக ராசியினர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக இருக்கின்றனர். வாழ்க்கையின் பல சவால்களை சந்தித்த பிறகு 40 வயதிற்கு மேல் இவர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும். இவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் இவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றும். வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்களுக்கு இருந்த தடைகள் நீங்கி செல்வம் தானாக தேடி வரும்.
குறிப்பு: 40 வயதிற்கு மேல் ஒருவர் பணக்காரர் ஆவதற்கு ராசி மட்டுமல்லாது ஜாதகத்தில் உள்ள அமைப்புகளும் முக்கியம். ஜாதகத்தில் 2 ஆம் இடமான தன ஸ்தானம், 9 ஆவது இடமான பாக்கிய ஸ்தானம், 11 வது இடமான லாப ஸ்தானம் ஆகியவற்றின் அதிபதிகளின் தசா புத்தி 40 வயதிற்கு மேல் வரும் பொழுது அபரிமிதமான செல்வம் சேரும். அதேபோல் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருந்தால் ஆரம்பத்தில் சோதனைகளைக் கொடுத்தாலும், முடிவில் நிலைத்து நிற்கக்கூடிய செல்வத்தை தருவார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)