
மனித வாழ்க்கையில் தடைகளும் சவால்களும் ஏற்படுவது இயல்பானதே. ஆனால், நம்முடைய ஜனன ஜாதகத்தின்படி அமையப்பெற்ற ராசிக்கு உகந்த தெய்வங்களை முறைப்படி வழிபாடு செய்யும் போது, அந்தத் தடைகள் யாவும் பனிபோல் விலகும் என்பது ஆன்மீக உண்மை. 12 ராசிகளுக்கும் தாரக மந்திரங்களும், பிரத்யேக வழிபாட்டு முறைகளும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எளிய பரிகார முறைகளையும், எந்த ராசியினர் எந்த தெய்வத்தை வணங்கினால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும் என்பதையும் இந்த இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த வழிபாடுகளை முறையாக செய்து வந்தாலே, வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதை காண முடியும்.
நெருப்பு மற்றும் நீர் தத்துவத்தைக் கொண்ட இந்த இரு ராசிகளுக்கும் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர்கள் நினைத்தது நடக்க, செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளி மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், எளிய பரிகாரமாக செவ்வாய் தோறும் துவரை தானியம் அல்லது செப்பு நாணயம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு 'ஓம் சரவணபவ' மந்திரத்தை 21 முறை உச்சரித்து வர, நினைத்த காரியங்கள் தடையின்றி கைகூடும்.
சொகுசு மற்றும் கலைகளுக்கு அதிபதியான சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற இந்த ராசிக்காரர்கள், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீரங்கநாதரை வழிபட வேண்டும். நினைத்த காரியம் உடனே நிறைவேற, வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் (காலை 6-7 அல்லது இரவு 8-9) நெய் தீபமேற்றி, தாயாருக்கு வெள்ளை நிற மலர்களைச் சாற்றி வழிபட வேண்டும். மொச்சை பயிறு சுண்டல் செய்து நிவேதனம் செய்வது கூடுதல் பலன் தரும்.
புத்தி கூர்மைக்கும் கல்விக்கும் அதிபதியான புதனின் ஆதிக்கம் நிறைந்த இவர்கள், ஸ்ரீ மகாவிஷ்ணு மற்றும் ஹயக்ரீவரை வணங்குவது சிறந்தது. புதன்கிழமைகளில் துளசி மரத்திற்கு நீர் ஊற்றி, பெருமாள் கோவிலில் தாயாருக்கு பச்சை நிற வளையல்களைக் காணிக்கையாக அளித்தால், தடைப்பட்ட காரியங்கள் யாவும் சட்டென்று துளிர்விடும். தேர்வு மற்றும் வேலைவாய்ப்புகளில் வெற்றி நிச்சயம்.
மனோகாரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், மனக்குழப்பங்கள் நீங்கி நினைத்தது நடக்க அம்பிகை (பார்வதி தேவி) மற்றும் சிவபெருமானை வழிபட வேண்டும். திங்கட்கிழமைகளில் பௌர்ணமி தினத்திலும் அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்வதும், சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதும் இவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தையும், மன அமைதியையும் கொண்டு சேர்க்கும்.
நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசியினர், தங்களின் தலைமைப் பண்பு மிளிரவும், நினைத்த இலக்குகளை அடையவும் சூரிய நாராயணர் மற்றும் சிவபெருமானை வழிபட வேண்டும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, செப்புப் பாத்திரத்தில் நீர் அர்ப்பணிப்பது (அர்க்கியம்) இவர்களது வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும், அரசாங்க அனுகூலங்களையும் தேடித்தரும்.
ஆன்மீகம் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான குரு பகவானின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், தட்சிணாமூர்த்தி மற்றும் சீரடி சாய்பாபாவை வழிபட வேண்டும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற மலர்கள் மற்றும் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடுவதும், ஆதரவற்ற முதியோர்களுக்குத் தங்களால் இயன்ற மஞ்சள் நிற ஆடைகள் அல்லது உணவை தானமாக வழங்குவதும் இவர்களது பிரார்த்தனைகளை உடனே நிறைவேற்ற உதவும்.
கர்ம காரகனான சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற இந்த இரு ராசியினரும், தடைகள் விலகி நினைத்தது நடக்க ஸ்ரீ காலபைரவர் மற்றும் அனுமனை வழிபட வேண்டும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றி, அனுமன் சாலிசா பாராயணம் செய்வதும், சனிக்கிழமை மாலை வேளையில் பைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடுவதும் இவர்களது கர்ம வினைகளைக் குறைத்து, வாழ்வில் பெரும் முன்னேற்றத்தைத் தரும்.
பொதுவான டிப்: எந்த ராசியினராக இருந்தாலும், குலதெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து விட்டு, இந்த பிரத்யேக ராசி வழிபாட்டை மேற்கொள்ளும் போது பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.