Wednesday Astrological Remedies For Career Growth : உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கான எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்கள்..
வேலையில் முன்னேற்றத்திற்கு புதன்கிழமை இதை செய்யுங்கள்
என்னதான் இரவு பகலாக உழைத்தாலும், சிலருக்கு வேலையில் உரிய அங்கீகாரமோ அல்லது பதவி உயர்வோ கிடைப்பதில்லை. "நம்ம திறமை யாருக்கும் தெரியலையே" என்ற ஆதங்கம் உங்களுக்கு இருக்கிறதா? இதற்குக் கிரகங்களின் அமைப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
27
புதன் கிரகம் மற்றும் வேலைக்கு இடையேயான தொடர்பு
ஜோதிட சாஸ்திரப்படி, புதன் கிரகம் தான் ஒருவருடைய புத்திசாலித்தனம், பேச்சுத் திறமை, வியாபார யுக்தி மற்றும் உத்தியோக வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. புதனின் பலம் குறைந்தால் வேலையில் குழப்பமும், அங்கீகாரமின்மையும் ஏற்படும். புதனுக்குரிய புதன்கிழமைகளில் கீழே உள்ள எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் கேரியரில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்க்கலாம்.
37
புதன்கிழமை மற்றும் பச்சை நிறம்
புதன்கிழமை அன்று பச்சை நிற ஆடைகளை அணிவது அல்லது ஒரு பச்சை நிறக் கைக்குட்டையை உங்களுடன் வைத்துக்கொள்வது புதன் கிரகத்தின் கதிர்வீச்சை உங்களுக்குச் சாதகமாக்கும்.
47
சுத்தமான வேலை இடம் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்
ஜோதிடப்படி, சுத்தமில்லாத இடம் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். உங்க டேபிள்ல ஃபைல்கள் சிதறிக் கிடந்தாலோ அல்லது கம்ப்யூட்டர் டேபிள் அழுக்கா இருந்தாலோ, அது உங்க வேலை வேகத்தை பாதிக்கும். புதன்கிழமை உங்க வேலை இடத்தை சுத்தம் செஞ்சு, ஒழுங்குபடுத்துவது புதன் கிரகத்தை சாந்தப்படுத்த ஒரு எளிய பரிகாரம்.
ஜோதிடம் மற்றும் வாஸ்து ரெண்டுலயுமே, வடக்கு திசை வாய்ப்புகளோடும், வேலை முன்னேற்றத்தோடும் தொடர்புடையது. வேலை செய்யும்போது, குறிப்பா புதன்கிழமை, வடக்கு திசை பார்த்து உட்கார முயற்சி பண்ணுங்க. இது முடியலன்னா, உங்க டேபிள்ல வடக்கு திசையை நோக்கி ஒரு பச்சை செடி அல்லது பச்சை நிற பொருளை வைப்பது கூட நன்மை தரும்.
67
விநாயகர் பூஜை மூலம் தடைகள் நீங்கும்
தடைகளை நீக்கும் வல்லமை படைத்த விநாயகப் பெருமானுக்கு புதன்கிழமை அன்று அருகம்புல் சாத்தி வழிபடுவது புதன் தோஷத்தைப் போக்கி, உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்றுத் தரும். இதை தொடர்ந்து செஞ்சா, வேலையில் வரும் தடைகள் குறையும், முடிவெடுப்பதில் தெளிவு பிறக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில், தானம் செய்வது மிகச் சிறந்த பரிகாரமாக சொல்லப்படுது. புதன்கிழமை பச்சை காய்கறிகள், பச்சை நிற பழங்கள், அல்லது இனிப்புகளை தானம் செய்வது புதன் கிரகத்தின் அருளைப் பெற்றுத் தரும். இது மன அமைதியைக் கொடுக்கும். மனசு அமைதியா இருந்தா, வேலையிலயும் நல்ல முன்னேற்றம் காண முடியும்.