Astrology: இந்த 5 ராசிக்காரர்கள் எதிர்காலத்தில் நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Nov 11, 2025, 03:23 PM IST

zodiac signs that know the future in advance: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு திறன் அதிகமாகக் கொண்டவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
நடக்க இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணங்கள், ஆளுமைத் திறன்கள், பண்புகள் உண்டு. அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் திறன் இயல்பாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இது மாயமோ, மந்திரமோ கிடையாது. மாறாக இது சில ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் மனதின் கூர்மையாகும். 

ஜோதிடத்தின்படி நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளிடம் இந்த உள்ளுணர்வு திறன் அதிகமாக இருக்கிறது. இந்த உள்ளுணர்வு மூலம் அவர்கள் நடப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்கின்றனர்.

25
மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களை குரு மற்றும் நெப்டியூன் கிரகங்கள் ஆள்கிறது. நெப்டியூன் கிரகம் கனவுகள், மாயைகள் ஆகியவற்றின் காரகராவார். மீன ராசிக்காரர்கள் இந்த அண்டத்தின் ஆற்றல்களுடன் ஆழமான தொடர்பை கொண்டுள்ளனர். இவர்களின் கனவுகள் பெரும்பாலும் வருங்காலத்தில் நிகழ இருப்பதை முன்கூட்டியே இவர்களுக்கு தெரிவித்து விடும். 

இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சி ஓட்டங்களை எளிதில் உள்வாங்க கூடியவர்கள். ஒரு சூழ்நிலை எப்படி மாறப்போகிறது என்பதை இவர்களால் முன்கூட்டியே உணர முடியும். இவர்களின் உள்ளுணர்வு ஒரு சக்தி வாய்ந்த ஆறாவது உணர்வு போல செயல்படுகிறது.

35
கடகம்

கடக ராசியை சந்திர பகவான் ஆள்கிறார். இவர் மனம், உணர்ச்சிகள், உள்ளுணர்வின் காரகராவர். சந்திரன் வளர்பிறை தேய்பிறை என்று மாறுதலுக்கு உள்ளாவது போலவே கடக ராசிக்காரர்களின் உணர்ச்சிகளும் மாறுபடும். இந்தத் தொடர்ச்சியான உணர்ச்சி அலைகள் காரணமாக, இவர்களுக்கு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களையும் எளிதில் உணரும் திறன் உள்ளது. இவர்களின் உள்ளுணர்வு பெரும்பாலும் உணர்வுபூர்வமான உணர்திறன் மூலம் வெளிப்படுகிறது. 

அதாவது ஒரு நபர் அல்லது சூழ்நிலை பற்றி எந்த தகவலுமே இல்லாமல் உணர்ச்சி ரீதியாக அதைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். இவர்களின் உள்ளுணர்வு பெரும்பாலும் குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களே பாதுகாப்பதில் முன்னிலை வகிக்கிறது.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோ கிரகத்தால் ஆளப்படுபவர்கள். புளூட்டோ கிரகமானது ரகசியங்கள், ஆழமான மாற்றம் மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு விஷயத்தை ஆழமாக சென்று ஆராயும் இயல்புடையவர்கள். இவர்கள் ஒருவரின் உள்ளத்தில் மறைந்திருக்கும் நோக்கங்களையும், பொய்களையும் எளிதில் கண்டறியும் திறன் கொண்டவர்கள். 

இவர்களின் உள்ளுணர்வு மிகத் தீவிரமானது. தங்களைச் சுற்றி நடக்கும் செயல்களையும், சூழ்நிலைகளையும் மனிதர்களின் இயல்பையும் வைத்து எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்பதை துல்லியமாக ஊகிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.

55
பிற ராசிகள்

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தீவிர கவனம் மற்றும் கூர்மையான பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தின் நுண்ணிய விவரங்களை கூட உன்னிப்பாக கவனித்து, அதிலிருந்து ஒரு முடிவுக்கு வருவார்கள். வரவிருக்கும் தடைகள், சவால்களை தங்கள் பகுப்பாய்வு திறனால் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டங்களை வகுப்பதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலித்தனத்துடன் கூடிய விழிப்புணர்வு மிக்கவர்கள். இவர்கள் சமுதாயத்தில் நடக்கும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து, அதற்கேற்ப புதிய சிந்தனைகளையும், திட்டங்களையும் உருவாக்குவார்கள். இவர்களின் திறன் பெரும்பாலும் தொலைநோக்குப் பார்வையாகவே வெளிப்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories