ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?

Published : Feb 02, 2025, 12:32 PM IST

Top 3 Hard Working Zodiac Signs : ஜோதிடத்தில் இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கேற்ப அவர்களுக்கு பாராட்டு மட்டும் கிடைக்காது. அது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

PREV
14
ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?
ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?

Top 3 Hard Working Zodiac Signs : இந்த உலகத்தில் நாம் விதமான மக்களையும் பார்ககலாம். சிலர் கஷ்டப்பட்டு உழைப்பவர்களாக இருப்பார்கள். சிலர் சோம்பேறியாக இருப்பார்கள். இன்னும் சிலர் உழைப்பதே தெரியாது, ஆனால், அவர்கள் வீடு, வாசல், தோட்டம், கார் என்று சொகுசாக வாழ்வார்கள். ஒரு சிலர் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைப்பாங்க. அவர்களுக்கு மட்டும் அவர்களுக்கான பாராட்டும் கிடைக்காது, உழைத்ததற்கான கூலியும் கிடைக்காது. இதனால், அவர்கள் ரொம்பவே கவலையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட துரதிர்ஷ்டமான ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் நாம் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்

24
ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?

ரிஷபம் ராசி:

பொதுவாக ரிஷப ராசியினரிடம் பிடிவாத குணம் சாஸ்தியாக இருக்கும். ஆனால், வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். எந்த சவாலையும் பார்த்து பின்வாங்கவே மாட்டார்கள். அதை துணிச்சலோடு எதிர்கொள்வார்கள். இலக்கை அடைவதற்கு எல்லா வகையிலும் முயற்சி செய்வார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற தடைகளையும், சவால்களையும் கடந்து தான் முன்னேறி செல்வார்கள். ஆனால், அவர்கள் கஷ்டப்பட்டதற்கான முழு பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதனால், அவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள்.

34
வேலைக்கான பாராட்டு கிடைக்காத ராசிகள்

கன்னி ராசி:

பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் எந்த வேலையாக இருந்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செய்யும் குணம் கொண்டவர்கள். வேலையில் தவறு மட்டும் செய்து விடக் கூடாது என்பதற்காக பொறுமையாக இருப்பார்கள். கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், சில சந்தர்ப்பங்களில் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கான பலன் கிடைக்காமல் போய்விடும். ஆதலால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு கன்னி ராசியினருக்கு ரொம்ப காலம் ஆகும்.

44
ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?

மகரம் ராசி:

கூர்மையான புத்தியும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டவர்கள் தான் மகரம் ராசிக்காரர்கள். இவர்கள் இருக்கும் எல்லாவற்றையும் இழந்துவிட்டு இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மகர ராசியினருக்கு எந்த வேலையை கொடுத்தாலும் அவர்கள் கச்சிதமாக சரியாக முடித்து கொடுத்துவிடுவார்கள். நேரம், காலம் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கான வேலைக்கு உரிய அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்காது. இதனால், மகர ராசியினர் அடிக்கடி கஷ்டப்படுவாங்க.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories