Oct 22 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.! மகிழ்ச்சி பொங்கும் அற்புதமான நாள்.!

Published : Oct 21, 2025, 05:09 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
அக்டோபர் 22, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் மனதில் புது உற்சாகம் பிறக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியைத் தரும். உங்கள் அணுகுமுறை மற்றவர்களை ஈர்க்கும். சமூகத்தில் மற்றும் நண்பர்கள் வட்டத்தில் உங்கள் மதிப்பு உயரும். நேரத்தைக் கடைபிடிப்பது நன்மைகளைத் தரும்.

நிதி நிலைமை:

இன்றைய நாள் திடீர் பண வரவு இருக்கும். அதே சமயம் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. முதலீடுகள் செய்வதாக இருந்தால் நிதானத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். உறவினர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரலாம். பெரிய பணங்களை பரிமாற்றம் செய்யும் பொழுது அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். துணையின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். இதன் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். இதனால் மன நிம்மதி கிடைக்கும். நிறைவாக உணர்வீர்கள். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரங்கள்:

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. வெள்ளை நிறப் பொருட்களான அரிசி, பால், சர்க்கரை போன்றவற்றை தானமாக வழங்குவது நிதி மற்றும் மனக்குழப்பங்களை குறைக்க உதவும். ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories