Oct 22 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று புது தைரியம் கிடைக்கும்.! துணிச்சலாக முடிவெடுத்து சாதித்து காட்டுவீர்கள்.!

Published : Oct 21, 2025, 05:05 PM IST

Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
அக்டோபர் 22, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்குள் புதிய உத்வேகத்தை உணர்வீர்கள். தைரியத்துடன் செயல்படுவீர்கள். எதற்கும் அஞ்சாமல் முடிவுகளை எடுத்து வெற்றியை ஈட்டுவீர்கள். சிரமமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக கையாண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறுவீர்கள். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கு பதிலாக, உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு செயல்படுவது தெளிவைத் தரும்.

நிதி நிலைமை:

இன்று நிதி ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். திட்டமிட்ட மற்றும் கவனத்துடன் கூடிய அணுகுமுறை நல்லது. புதிய முதலீடுகள் குறித்து கவனமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் தெளிவான திட்டமிடுடன் செயல்பட வேண்டும். தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உறவுகளில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது பிணைப்பை மேலும் பலப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் அல்லது நெருங்கியவருடன் பேசும் பொழுது பொறுமையுடனும் மென்மையான வார்த்தைகளுடனும் பேச வேண்டியது அவசியம். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயல்படுவது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் முருகப்பெருமானை வழிபடுவது தைரியம், வெற்றி மற்றும் தெளிவைத் தரும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி துணிச்சல் பெறுவதற்கு அங்காள பரமேஸ்வரி அல்லது துர்க்கை அம்மனை வழிபடலாம். புதன்கிழமை என்பதால் பச்சைப்பயிறு தானம் செய்யலாம். செந்நிற மலர்களை முருகனுக்கு சமர்ப்பிப்பது நல்லது. இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவிடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories