Risky Partners: நவக்கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த எண்ணிற்கு அதிபதி என்பதால், இவர்களிடம் இயற்கையிலேயே கம்பீரமும், தலைமைப் பண்பும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும்.
எண் கணித சாஸ்திரத்தின்படி, எந்தவொரு மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ராடிக்ஸ் (கூட்டு எண்) 1 ஆகும். நவக்கிரகங்களின் ராஜாவான சூரியன் இந்த எண்ணிற்கு அதிபதி என்பதால், இவர்களிடம் இயற்கையிலேயே கம்பீரமும், தலைமைப் பண்பும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் நிறைந்திருக்கும். காதலில் இவர்களது பிடிவாதம் மற்றும் ஆழமான பாசம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
26
ராடிக்ஸ் எண் 1
சூரியனின் ஆதிக்கம் இருப்பதால், காதலில் எப்போதுமே தங்களது வார்த்தைக்கும் முடிவுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று ராடிக்ஸ் 1 காரர்கள் விரும்புவார்கள். பார்ட்னரின் தனிப்பட்ட முடிவுகளில் கூட இவர்களின் தலையீடு சற்று அதிகமாக இருக்கும். இவர்களின் இந்த அதீத அக்கறை, சில நேரங்களில் பார்ட்னருக்கு தங்களை 'டாமினேட்' செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்திவிடும்.
36
ஈகோ கொஞ்சம் தூக்கல்தான்.. மன்னிப்பு கேட்க மாட்டாங்க!
இவர்களுக்கு சுயமரியாதை (Self-respect) என்பது உயிரை விட மேலானது. இதனால் காதல் என்று வந்துவிட்டாலும் இவர்களது ஈகோ தடையாக நிற்கும். காதலர்களுக்கிடையே சண்டை வந்தால், இவர்கள் எவ்வளவு தப்பு செய்திருந்தாலும் முதல்ல இறங்கி வந்து மன்னிப்பு கேட்கவே மாட்டார்கள். பார்ட்னர் தான் முதலில் வந்து 'சாரி' கேட்க வேண்டும் என்று பிடிவாதமாக காத்துக்கொண்டிருப்பார்கள்.
இவர்கள் காதலில் 100% உண்மையாக இருப்பார்கள். ஆனால், அதே சமயம் தங்களது பார்ட்னரும் அழகிலும், அறிவிலும், செயலிலும் 'பெஸ்ட்' ஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடும்போது, காதல் உறவில் சிறு சிறு விரிசல்கள் வரத் தொடங்கும்.
56
மனசுல இடம் தந்துட்டா.. எந்த எல்லைக்கும் போவாங்க
இவர்களிடம் சில கடினமான குணங்கள் இருந்தாலும், இவர்களைப் போல உண்மையான காதலர்களைப் பார்ப்பது அரிது. ஒருவரை மனதார நேசித்துவிட்டால், அவருக்காக எந்த எல்லைக்குச் செல்லவும் இவர்கள் தயங்க மாட்டார்கள். துரோகம் என்ற வார்த்தைக்கே இவர்களது காதல் அகராதியில் இடமில்லை. அந்தளவிற்குப் பார்ட்னரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார்கள்.
66
ராடிக்ஸ் 1 காதலர்களை எப்படிக் கையாள்வது?
இவர்களது ஈகோவை நேரடியாகக் காயப்படுத்துவது போல ஒருபோதும் பேசாதீர்கள். கோபத்தைக் குறைத்து, அன்பாகவும், மரியாதையாகவும், புரியும்படியும் எடுத்துச் சொன்னால், தங்களது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு உங்கள் பேச்சை அப்படியே கேட்பார்கள்.