Taurus Zodiac Signs : ரிஷப ராசிக்கு ஆவணி மாதம் எப்படி இருக்கும்? குரு, சனியின் அருள் கிடைக்குமா?

Published : Aug 13, 2025, 04:18 PM IST

Taurus Zodiac Signs Aavani Month Horoscope : ரிஷப ராசியைப் பொறுத்த வரையில் தமிழ மாதமான ஆவணி மாதம் (ஆகஸ்ட் 17 - செப்டம்பர் 17) விரிவான ராசி பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

PREV
15
ரிஷப ராசிக்கான ஆவணி மாதம் ராசி பலன்

கிரக நிலைகளின் பெயர்ச்சி மற்றும் பார்க்கும் இடங்கள், சொந்த ராசியில் இருக்கும் இடங்கள் ஆகியவற்றை பொறுத்து பலன்கள் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரையிலான காலகட்டம் ஆவணி மாத ராசி பலன்கள் ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

25
2025 ராசி பலன்கள்

பொதுப் பலன்கள்

ஆவணி மாதத்தின் தொடக்கத்தில், உங்கள் ராசிக்கு சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், பல நன்மைகளை அடைவீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

35
ரிஷப ராசி ஆவணி மாத ராசி பலன்கள் பரிகாரங்கள்

தொழில் மற்றும் நிதி நிலை

தொழில்: பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். சக ஊழியர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நல்லுறவு மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

நிதி: நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பண வரவு உண்டாகும். பழைய கடன்கள் அடைபடும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பை அதிகரிக்க இது நல்ல நேரம்.

45
ஆவணி மாத ராசி பலன்கள் 2025 ரிஷப ராசி

குடும்பம் மற்றும் உறவுகள்

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

காதல் உறவில் மகிழ்ச்சி நிலவும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும்.

ஆரோக்கியம்

உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறிய அளவிலான ஆரோக்கியக் குறைபாடுகள் வந்தாலும், அவை விரைவில் சரியாகிவிடும். மன அமைதிக்கு யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வது நல்லது.

55
ரிஷப ராசிக்கான ஆவணி மாதம் ராசி பலன்

பரிகாரம்

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி அம்மனை வழிபடுவது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டு வரும்.

பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது மன அமைதியையும், நல்லிணக்கத்தையும் அதிகரிக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories