Astrology: சூர்ய பார்வையால் கொட்டப்போகும் பணம்! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!

Published : Jun 26, 2026, 10:52 AM IST

நவக்கிரகங்களின் அரசனான சூரியனின் தற்போதைய கிரக நிலை, மூன்று ராசிகளுக்கு அமோகமான பலன்களை அள்ளித் தருகிறது. 3 ராசிக்காரர்கள் தொழில், நிதி, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், வெற்றிகளையும் காண உள்ளனர். 

PREV
15
சூரியன் — ஒளியின் அரசன்

நவக்கிரகங்களிலேயே மிக உயர்ந்த அந்தஸ்து கொண்டது சூர்யன். அவன் ஆத்மகாரகன், ராஜகாரகன், பராக்கிரமகாரகன். சூர்யன் எந்த ராசியில் நிலைகொள்கிறானோ, எந்த ராசியை பார்க்கிறானோ — அந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. குறிப்பாக தற்போதைய கிரக நிலையில், சூர்யனின் திருஷ்டி மூன்று ராசிகளின்மீது அமோக பலனை பொழிகிறது. அந்த மூன்று ராசிகளும் — மேஷம், சிம்மம், தனுசு.

25
மேஷம் — தொழிலில் தங்கமழை!

மேஷ ராசிக்காரர்களுக்கு சூர்யன் அதிபதி கிரகமான செவ்வாயோடு நெருங்கிய நட்பு பூணுகிறான். இந்த சமயத்தில் சூர்ய பார்வை மேஷத்தின்மீது விழும்போது, தொழில் ரீதியாக வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழும். நெடுநாளாக தேங்கி நிற்கும் சம்பளம் உயர வாய்ப்பு ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திடீரென்று நல்ல வாய்ப்பு கதவைத் தட்டும். தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளி அல்லது முதலீட்டாளர் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கண்ணில் தெரிகிறது. ஒரு கட்டத்தில் நம்பிக்கையற்று தவித்தவர்கள்கூட "இது என் காலம்!" என்று உணர்வார்கள்.

35
சிம்மம் — பணம் மடை திறந்தது போல் வரும்!

சிம்மம் சூர்யனுடைய சொந்த வீடு. எனவே சூர்யன் சிம்ம ராசியை நேரடியாகவோ பார்வையாகவோ தாக்கும்போது, அந்த பலன் இரட்டிப்பாகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு இது அனைத்து வகையிலும் சாதகமான காலம். பணவரவு எதிர்பாராத வழிகளில் வரும். சொத்து சம்பந்தமான வழக்குகள் சாதகமாக முடியும். தொழில் கடன் வாங்க முயன்றவர்களுக்கு வங்கி ஒத்துழைப்பு கிடைக்கும். கலை, தொழில்நுட்பம், அரசியல் சார்ந்த துறைகளில் உயர்வு காணலாம். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் ஏற்படும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும். சிம்ம ராசிக்காரர் எந்தத் துறையில் கடுமையாக உழைத்தாலும், அந்த உழைப்பு இப்போது பலன் தர தயாராக இருக்கிறது.

45
தனுசு — வெற்றியின் வழி திறக்கிறது!

தனுசு ராசியின் அதிபதி குரு, சூர்யனுக்கு மித்ர கிரகம். இரண்டும் சேர்ந்து செயல்படும்போது ஞானம், செல்வம், மரியாதை — மூன்றும் ஒரே நேரத்தில் வருகின்றன. வெளிநாட்டு பயணம் அல்லது வேலை வாய்ப்பு பெற நினைத்திருந்தவர்களுக்கு வழி திறக்கும். உயர் கல்வி படிக்க விரும்பியவர்களுக்கு தடைகள் விலகும். வியாபாரத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணம் வசூலாகும். ஆன்மிக ஆர்வமுள்ளவர்களுக்கு தீர்த்த யாத்திரை யோகம் கூடும். சமூகத்தில் மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் வரும்.

55
பரிகாரம் மற்றும் வழிகாட்டல்

இந்த நல்ல காலத்தை மேலும் உறுதிப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய வணக்கம் செய்யுங்கள். சூர்ய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் ஆகியவை செய்தால் கிரகபலன் மேலும் கூடும். தர்ம செயல்களில் ஈடுபடுவது சூர்யனை மேலும் அனுகூலமாக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்தால், அது பலமடங்கா பெருகி நமக்கு கிடைக்கும். அதேபோல் நல்லது செய்தால் அது நமக்கு திரும்ப திரும்ப வரும். எனவே சூரியனின் பார்வையால் அதிர்ஷ்ட காத்து வீசும் இந்த நேரத்தில் நல்ல விஷயங்கள் பலவும் நமக்கு வந்து சேர்ந்துகொண்டே இருக்கும் என்பதால் நாமும் நல்லதுசெய்துகொணடே இருப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories