கும்ப ராசியில் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளுக்கு பாவம், பழி, அவமானம் தேடி வரப்போகுது.!

Published : Feb 11, 2026, 12:52 PM IST

Sun Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனும் ராகுவும் எதிரிகளாக கருதப்படுகின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இணையும் போது அது அசுபமாக கருதப்படுகிறது. இந்த அசுப யோகத்தின் தாக்கம் 4 ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். 

PREV
15
கிரகண யோகம் 2026

பிப்ரவரி 13, 2026 அன்று, சூரியன் மகர ராசியிலிருந்து வெளியேறி கும்ப ராசிக்குள் நுழைவார். இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன், புதன் மற்றும் ராகு உள்ளனர். சுக்கிரனும் புதனும் சூரியனின் நண்பர்கள், அதே நேரத்தில் ராகு சூரியனின் எதிரி கிரகமாவார். சூரியனும் ராகுவும் ஒரே ராசியில் இருக்கும்போது, ​​அது ஒரு அசுபமான சேர்க்கையாகக் கருதப்படுகிறது. 

இது கிரகண யோகம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனும் ராகுவும் பிப்ரவரி 13 முதல் மார்ச் 14, 2026 வரை கும்ப ராசியில் இருப்பார்கள். எனவே இந்த மாதம் முழுவதும் 4 ராசியினருக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கும். அந்த ராசிகள் எவை என்று பார்க்கலாம்.

25
ரிஷபம்

சூரியன்-ராகு சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம் ரிஷப ராசியினருக்கு சிக்கலை ஏற்படுத்தும். அடுத்தடுத்து கெட்ட செய்திகள் வரலாம். இதனால் பதற்றமும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முதலீடுகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற சர்ச்சைகளில் சிக்க நேரிடலாம். நினைத்த காரியங்கள் தடைபடலாம். வாகனம் ஓட்டும் போது அதிக கவனத்துடன் இருக்கவும்.

35
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இவர் ராகுவுடன் இணைவதால் உருவாகும் கிரகண யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். உறவினர்களுடன் தகராறுகள் ஏற்படலாம். புதிய வேலைகளைத் தொடங்குவதில் சிக்கல்கள் உருவாகலாம். சொத்து சம்பந்தமான ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.

45
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அடுத்த சில வாரங்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். கிரகண யோகம் காரணமாக நன்றாக போய்க் கொண்டிருந்த வேலைகள் கெட்டுப்போகலாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். தேவையற்ற சர்ச்சைகளில் உங்கள் பெயர் வரலாம். ரகசியங்கள் கசிந்து அவமானப்பட நேரிடலாம். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.

55
கும்பம்

கும்ப ராசியில்தான் ராகு-சூரியன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த ராசியின் அதிபதி சனி, இருவருக்கும் எதிரி. எனவே, இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண ஆதாய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். மன அழுத்தம் அதிகரிக்கும். உடல்நலமும் பாதிக்கப்படலாம். நீதிமன்ற வழக்குகளை சந்திக்க நேரலாம். எனவே அமைதி காப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories