சுக்கிரன் அஸ்தமனத்தால் மகர ராசிக்காரர்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மன அழுத்தம் அதிகமாகலாம். கடன் வாங்கும் சூழ்நிலை கூட வரலாம், அதனால் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் புது வேலைகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். நஷ்டம் வர வாய்ப்புள்ளதால் முதலீடுகள் செய்வதையும் தவிர்த்து விடுங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.