ஜோதிடவியலில், சூரியன் ஆளுமை, கௌரவம், அரசாங்க உத்தியோகம் மற்றும் தலைமைப் பண்பைக் குறிப்பவர்; புதன் கணிதம், வணிகத் திறன், வாக்கு வன்மை மற்றும் லாபத்திற்குரிய காரகர். இந்த இரு கிரகங்களும் இணைந்து துலாம் ராசியில் அமரும் போது, தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த தேக்க நிலை முழுமையாக விலகிவிடும்.
பெரிய நிறுவன ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், அரசாங்கம் சார்ந்த உதவிகள் கிடைப்பது மற்றும் நிர்வாகத் துறையில் அதிரடியான உயர்வுகளைப் பெறுவதற்கு இக்காலம் பொன்னான வாய்ப்பாக அமையும். அவசர முடிவுகளைத் தவிர்த்து, புத்தி கூர்மையுடன் செயல்படுபவர்கள் இந்தச் சேர்க்கைக் காலத்தில் கோடிகளில் புரளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சூரியன்-புதன் சேர்க்கையால் தடைகளை உடைத்து முன்னேறப் போகும் 4 ராசிகள் எவை என பார்ப்போம்.
இதையும் படிங்க : Fish Biryani : கேரளா ஸ்டைலில் மலபார் மீன் பிரியாணி! அடிபொலி டேஸ்ட்டில் செய்வது எப்படி?