ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவை ஒன்றுக்கொன்று அமைத்துக் கொள்ளும் பார்வைகளும் மனித வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சுப போகங்கள், காதல், அழகு மற்றும் செல்வத்திற்கு அதிபதியான சுக்கிரனும், நீதி, கர்மா மற்றும் கடின உழைப்பிற்கு அதிபதியான சனி பகவானும் நேருக்கு நேர் சந்திக்கும் அரிதான நிகழ்வு விரைவில் நிகழவுள்ளது.
வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, சனியும் சுக்கிரனும் 180 டிகிரி கோணத்தில் நேருக்கு நேர் எதிரெதிரே அமர்ந்து 'பிரதியுதி திருஷ்டி யோகத்தை' உருவாக்குகின்றனர். இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும் என்றாலும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு யோகக் காலமாகவும், அளப்பரிய நிதி நன்மைகளையும், தொழில் வளர்ச்சியையும் தரக்கூடியதாகவும் அமையவுள்ளது.