
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என அனைத்திலும் இந்த ராசிக்காரர்கள் சிறந்து விளங்க இருக்கின்றனர்.
கர்ம காரகராக விளங்கும் சனி பகவான் 2027 ஜூன் வரை மீன ராசியில் இருப்பார். அதன் பின்னர் அவர் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுப கிரகமான குரு பகவான் 2026 ஜூன் இரண்டாம் தேதி கடக ராசியில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். அதன் பிறகு அக்டோபர் 30, 2026 அவர் சிம்ம ராசிக்குள் நுழைந்து பயணிக்க இருக்கிறார். அசுப கிரகங்களான ராகு பகவான் அக்டோபர் மாதம் வரை கும்ப ராசியிலும், கேது பகவான் சிம்ம ராசியிலும் பயணிக்க இருக்கின்றனர். அதன் பின்னர் இரு கிரகங்களும் தங்களது நிலையை மாற்ற இருக்கின்றனர். இந்த நான்கு கிரகங்களின் மாற்றத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு 2026 பிற்பகுதி தொடங்கி 2027 ஆம் ஆண்டு முழுவதும் சிறப்பானதாக அமைய இருக்கிறது. தற்போது சனி பகவான் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து வருவதால் ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. குருபகவான் 3 மற்றும் நான்காம் வீடுகளில் பெயர்ச்சி அடைந்து ஐந்தாம் வீட்டில் நிலைபெற இருக்கிறார். ராகு பகவான் 11வது வீடான லாப ஸ்தானத்திலும், கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் இருக்கின்றனர்.
எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒன்றரை வருடங்களுக்கு எடுக்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். பொருளாதார நிலை உயரும். நிதிநிலைமை மேம்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடக ராசிக்காரர்களுக்கு குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் நிலையால் வாழ்க்கையில் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் காணப்படும். குறிப்பாக ஜூன் இரண்டாம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திற்குள் நுழைந்த பிறகு, கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். உங்களை வாட்டி வதைத்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
சகோதரர்கள் வழியில் இருந்து சொத்து அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்கலாம். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். நல்ல வரன் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். குரு பகவானின் அருளால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிர்ஷ்டம் கூடும். உபரி வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆறாவது வீட்டில் சனி பகவான் நிலை பெற்றிருக்கிறார். குரு பகவான் அக்டோபர் மாதத்திற்கு பிறகு 11-வது வீட்டிற்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றம் பெறுவீர்கள். வீட்டில் செல்வம் பெருகும். கூடுதல் லாபம் கிடைக்கும். பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
வீடு, சொத்து, மனை, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ராகு மற்றும் கேது பகவானின் நிலையால் உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் பொன், பொருள், நகை, ஆடை, ஆபரணங்கள் சேர்க்கைகளும் வாழ்க்கையில் இருந்து வந்த மந்த நிலை விலகி, புதிய உற்சாகம் பிறக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அந்தஸ்து உயரும்.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நான்கு கிரகங்களின் நிலையால் அற்புதமான காலக்கட்டம் தொடங்க இருக்கிறது. 2027 ஆம் ஆண்டு மகர ராசிக்காரர்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். இருந்து வந்த தடைகள் நீங்கும். பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கருத்து வேறுபாடால் பிரிந்து சென்ற கணவன் மனைவி அல்லது குடும்ப உறவுகள் மீண்டும் இணைவீர்கள்.
குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும். மாமனார் அல்லது மைத்துனர் வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பழைய கடன்கள் முடிவுக்கு வரும் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் அபரிமிதமாக உயரும். சேமிப்பு அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு குறித்த மகிழ்ச்சியான செய்திகளை கேட்பீர்கள்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.