ஜோதிடத்தின்படி நவபஞ்சம ராஜயோகம் என்பது ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாவது இடத்தில் மற்றொரு கிரகம் இருக்கும் பொழுது உருவாகும் யோகத்தை குறிக்கிறது. துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரனும் இருப்பதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது.
சுக்கிரனுடன் ராகு சேர்வதால் ஆடம்பரம், சுகபோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், புதிய வருமான வழிகள், செல்வ செழிப்பு, தனிநபர் வளர்ச்சி, திருமண வாழ்வில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய சேர்க்கை காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.