
வேத ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகள் வரை பயணிப்பார். இவர் மீண்டும் அதே ராசிக்கு வருவதற்கு 18 வருடங்கள் ஆகும். ராகு பகவான் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் பின்னோக்கிய நிலையிலேயே பயணிப்பார். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் அவர் 2026 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். இந்த நிலையில் அவர் துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிர பகவானுடன் இணைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
ஜோதிடத்தின்படி நவபஞ்சம ராஜயோகம் என்பது ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து அல்லது ஒன்பதாவது இடத்தில் மற்றொரு கிரகம் இருக்கும் பொழுது உருவாகும் யோகத்தை குறிக்கிறது. துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் ராகுவும், கும்ப ராசியின் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரனும் இருப்பதன் காரணமாக நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது.
சுக்கிரனுடன் ராகு சேர்வதால் ஆடம்பரம், சுகபோகங்கள், திடீர் அதிர்ஷ்டம், புதிய வருமான வழிகள், செல்வ செழிப்பு, தனிநபர் வளர்ச்சி, திருமண வாழ்வில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய சேர்க்கை காரணமாக அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)