ஜோதிடவியலில், புரட்டாசி மாதத் தொடக்கத்தில் நிகழும் கிரகப் பெயர்ச்சிகள் பிரபஞ்சத்தின் தெய்வீக ஆற்றலை மனிதர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்கின்றன. சூரிய பகவான் ஆத்மா, கௌரவம் மற்றும் அதிகாரத்திற்குக் காரகனாகவும், புதன் பகவான் அறிவு, வியாபாரம் மற்றும் தனலாபத்திற்கு அதிபதியாகவும் விளங்ககிறார்கள். கன்னி ராசியில் இந்த இருவரும் சங்கமிக்கும் போது, மகாவிஷ்ணுவின் ஸ்வரூபமான புதனின் அருளும், சூரிய நாராயணமூர்த்தியின் தேஜசும் இணைந்து ஒரு ஜாதகத்தில் 'புரட்டாசி பெருமாள் யோகத்தை' உருவாக்குகிறது.
பெருமாள் அருளும் இந்த மாதத்தில் இந்த யோகம் கைகூடும் போது, தனி மனிதனின் லட்சியங்கள் நிறைவேறத் தொடங்குவதுடன், இதுவரை தேக்க நிலையில் இருந்த தொழில்களும், முடங்கிப் கிடந்த சொத்து விவகாரங்களும் பெருமாளின் திருவருளால் தடையின்றி நிவர்த்தியாகும். இது வெறும் கிரக மாற்றம் மட்டுமல்ல; மாறாக, உங்களின் தலைவிதியை மாற்றி உங்களை அசுர வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பொற்காலத் திருப்புமுனையாகும்.
பெருமாளின் அருளால் அசுர வளர்ச்சி பெறப் போகும் அந்த 4 ராசிகள் எவை என பார்ப்போம்.
இதையும் படிங்க : Coffee-Tea : காபி, டீ குடிச்சதும் சிலருக்கு ஏன் பாத்ரூம் வருது? இது ஆபத்தா? காரணம் இதுதான்!