ஒரு நபரின் பிறந்த தேதியை வைத்து, அவருடைய பிறந்த எண்ணை கணக்கிடலாம். இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, ஒருவரின் எதிர்காலத்தையும் குணாதிசயங்களையும் கணிக்க முடியும் என்கிறது நியூமராலஜி.
ஒரு மாதத்தின் 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் பிறவி எண் 5 ஆகும். இந்த எண்ணின் அதிபதி புதன் கிரகம். புதன், ஒருவரின் ஆரோக்கியம், புத்திசாலித்தனம், தொழில் மற்றும் பேச்சுத் திறனுக்கு காரணமானவர். அதனால், இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.
25
இயற்கையிலேயே இருக்கும் பிஸ்னஸ் மைண்ட்!
பிறவி எண் 5 கொண்டவர்கள் சிறு வயதிலிருந்தே சூழ்நிலைகளை சரியாக கணிக்கும் திறன் பெற்றிருப்பார்கள். தைரியமாக முடிவெடுப்பார்கள், ரிஸ்க் எடுக்கப் பயப்பட மாட்டார்கள். வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் இவர்களைத் தேடி வரும். இதனால், இவர்களுக்கு இயல்பாகவே தொழில் திறன்கள் வளரும்.
35
பேச்சுத்திறன்தான் இவர்களின் பலம்!
எண் 5 கொண்டவர்கள் அனைவரிடமும் எளிதில் பழகக்கூடியவர்கள். இவர்களின் பேசும் விதம் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். எந்தப் பிரச்சனை வந்தாலும் உடனடியாகத் தீர்வு காண்பார்கள். எந்தத் துறையில் இறங்கினாலும் சீக்கிரம் பெயர் வாங்கி விடுவார்கள். தொழிலில் ஜெயிக்க இதுவே பெரிய பலம்.
புதன் கிரகம் செல்வம், புத்திசாலித்தனம் மற்றும் தொழிலைக் குறிக்கிறது. பிறவி எண் 5 உள்ளவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறன் அதிகமாக இருக்கும். வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி முதலீடு செய்வதிலும் இவர்கள் கில்லாடிகள். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விராட் கோலி, ரத்தன் டாடா போன்ற பிரபலங்கள் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான்.
55
எண் 5 காரர்களுக்கு உகந்த நாட்கள்
புதன்கிழமை இவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். அன்று விநாயகரை வழிபடுவது நல்லது. 'ஓம் கம் கணபதயே நமஹ', 'ஓம் ப்ராம் ப்ரீம் ப்ரௌம் சஹ புதாய நமஹ' மந்திரங்களை 108 முறை சொல்வது மன அமைதியைத் தரும். மரகதக் கல்லை புதன்கிழமை வலது கை மோதிர விரலில் அணிந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். பச்சை நிறம் இவர்களுக்கு ராசியான நிறம்.