ஒவ்வொரு மாதத்திலும் 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 6 ஆம் எண்ணிற்கு கீழ் வருகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மீது சுக்கிரனின் செல்வாக்கு மிகவும் வலுவாக இருக்கும். சுக்கிர பகவான் அன்பு, அழகு, ஆடம்பரம், செல்வம், பொருள், வசதிகள் ஆகியவற்றின் காரகராவார். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை நாடுகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை நிலையாக மாறுகிறது. இதன் காரணமாக அவர்கள் நிதி வளர்ச்சி அதிகரிக்கிறது் சுக்கிர பகவான் வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டத்தை வழங்குகிறார். இதன் காரணமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின்னர் தங்களின் வாழ்க்கைத் துணைக்கு பொருளாதார ரீதியாக உதவி புரிகின்றனர்.