Weekly Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, லாப ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவான்.! கோடீஸ்வர யோகம் கிடைக்கும்.!

Published : Nov 23, 2025, 05:47 PM IST

Kanni Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
வார ராசிப்பலன்கள் - கன்னி

கன்னி ராசி நேயர்களே, சூரிய பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனதில் அமைதி, தெளிவு கிடைக்கும் வாரமாக இருக்கும். புதனின் வலுவான நிலையால் அணுகுமுறை கூர்மையாகவும், பகுப்பாய்வு திறன் அதிகரித்தும் காணப்படும். வாரத்தின் முதற்பகுதியில் சந்திரனின் சஞ்சாரம் காரணமாக மனக்குழப்பங்கள் நீங்கி, படிப்படியாக அமைதி திரும்பும்.

நிதி நிலைமை:

லாப ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் காரணமாக புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். நிதி நிலைமையைப் பொறுத்தவரை பண வரவு அதிகரிக்கும். முதலீடுகளை செய்வதற்கு முன் அதன் உண்மைத் தன்மையை மதிப்பிடுவது அவசியம். குடும்பத்திற்காக சில கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோரின் உடல்நலம் குறித்து கவலைகள் ஏற்படலாம். மன அமைதிக்காக ஆன்மீக செயல்களில் ஈடுபடலாம்.

ஆரோக்கியம்:

வாரத்தின் ஆரம்பத்தில் ஆரோக்கியத்தில் கோளாறுகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். வாரத்தின் பிற்பகுதியில் உடல் உபாதைகள் நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்.

கல்வி:

மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியை குவிப்பார்கள். இருப்பினும் கல்வியைப் பற்றி அதிகம் பெருமைப்படுவதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலைகள் நீங்கி, பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

முக்கியப் பணிகளைச் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் செயல்திறன் மற்றும் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நன்மை பயக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சற்று அலைச்சலைச் சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் சூடான மற்றும் நேர்மறையான சூழ்நிலை நிலவும். சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தின் மீது உங்கள் முடிவுகளைத் திணிக்க முயற்சிப்பதைத் தவிர்க்கவும். பொறுமையைக் கடைப்பிடித்து, இணக்கமான தீர்வுகளைக் காண முயற்சி செய்யுங்கள். குடும்பத்தின் மீது உங்கள் முடிவுகளைத் திணிக்க முயற்சிப்பதைத் தவிர்க்கவும். பொறுமையைக் கடைப்பிடித்து, இணக்கமான தீர்வுகளைக் காண முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நீடிக்கும். உறவினர் மற்றும் நண்பர்களின் விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

பரிகாரம்:

தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது மன அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் உதவும். நரசிம்மப் பெருமாளை வணங்கி வர தடைகள் நீங்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories