குரு சந்திரன் இணைவால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் – 3 ராசிகளுக்கு அடிச்சு தூள் கிளப்பும் ராஜயோகம்!

Published : Jul 16, 2025, 11:11 PM IST

Moon Jupiter Conjunction Forms Gajakesari Rajayogam : குருவும், சந்திரனும் இணையும் நிலையில் அது கஜகேசரி ராஜயோகமாக உருவாகிறது. இந்த யோகம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்த தரப்போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
15
குரு, சந்திரன் இணைவு கஜகேசரி ராஜயோகம்

குருவும், சந்திரனும் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. குரு சுப கிரகம். நன்மைகளை செய்யக் கூடியவர். இதே போன்று சந்திரன் மனதை குறிக்கிறது. இது பெண்ணிய கிரகம். இந்த 2 கிரகங்களும் இணையும் போது அது ஜோதிடத்தில் யோகமாக கருதப்படுகிறது. அந்த யோகம் தான் கஜகேசரி ராஜயோகம். இந்த கஜகேசரி ராஜயோகம் வரும் 22 ஆம் தேதி மிதுன ராசியில் உருவாகிறது. அப்படி உருவாகும் கஜகேசரி ராஜயோகம் 24ஆம் தேதி வரையில் நீடிக்கிறது.

25
கஜகேசரி ராஜயோகம் பலன்

குருவும் சந்திரனும் இணைந்து கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. செல்வம் செல்வாக்கு அதிகரிக்க செய்யும், பேரும், புகழும் கிடைக்கும், ஆன்மிகத்தில் உயர்வு ஏற்படும் இப்படி பல நன்மைகளை குரு சந்திரன் இணைவு தரும்.

35
ரிஷப ராசிக்கான கஜகேசரி ராஜயோக பலன்:

இந்த யோகம் உங்களது ராசியுடன் திருமண ஸ்தானத்தில் உருவாகிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்ப கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். உங்களது பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்கள் மூலமாக உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவீர்கள். ஊடகத்துறை, வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் வரும்.

45
சிம்ம ராசிக்கான கஜகேசரி ராஜயோகம் பலன்

கஜகேசரி ராஜயோகம் உங்கள் ராசிக்கு வருமானம் மற்றும் லாப ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே, இந்த தருணத்தில் உங்களது வருமானம் இரட்டிப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்களும் உருவாகலாம். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். மன அமைதி கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.

55
துலாம் ராசிக்கான கஜகேசரி ராஜயோகம் பலன்:

குரு சந்திரன் இணைவானது துலாம் ராசிக்கு பல நன்மைகளை தர போகிறது. இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்குகிறது. வெளியூர், வெளிநாட்டு யோகம் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களது பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories