ஜோதிடத்தின்படி, கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு சுப கிரகங்களின் அரிய சேர்க்கை சேர்க்கை விருச்சிக ராசியில் நடைபெற உள்ளது. வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகமானது ஆற்றல், தைரியம், வலிமை, வீரம், கோபம் மற்றும் சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே சமயம், சுக்கிரன் அழகு, இன்பம், ஆடம்பரம், செல்வம், மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது.
நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகம் அதன் சொந்த ராசியான விருச்சிகத்தில் நுழைந்து, அங்கு நட்பு கிரகமான சுக்கிரனுடன் சேரும்போது இந்த சேர்க்கை உருவாகிறது. இந்த அரிய கிரக சேர்க்கை சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். செவ்வாய் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.