Sevvai Peyarchi in Avittam Nakshatra 2026 : மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 15 அன்று இரவு 12:45 மணிக்கு செவ்வாய் பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இது சில ராசிகளுக்கு சுப பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
இன்று மகா சிவராத்திரி அன்று செவ்வாய் பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். திருவோண நட்சத்திரத்தில் இருந்து அவிட்டத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
25
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகாவன். மேஷ ராசியை ஆளும் கிரகத்தின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்கு ஆற்றலும், தைரியமும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும். வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிக பலன்களை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை கணிசமாக உயரும்.
35
ரிஷபம்
மகா சிவராத்திரியில் செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பயன்களைப் பெறுவார்கள். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாகும். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதலுடன் புதிய திட்டங்களைத் தொடங்குவீர்கள்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். நல்ல நேரத்தை அனுபவிப்பார்கள். நிலம் வாங்க நினைத்தால் இதுவே நல்ல நேரம். உங்கள் நிதி நிலைமை மேம்படும். சட்ட சிக்கல்களில் இருந்து தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் சாதகமான சூழல் ஏற்படும். கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
55
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். மகா சிவராத்திரியில் செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். உங்கள் வாழ்வில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)