ஜோதிடத்தின்படி, சந்திரன் மற்றும் குரு ஒரே ராசியில் அல்லது கேந்திர ஸ்தானத்தில், அதாவது 1, 4, 7, 10 ஆம் வீட்டில் இணைந்தால் ‘கஜகேசரி ராஜயோகம்’ உருவாகும். சந்திரன் மனநிலை, உணர்ச்சிகளைக் குறிக்கும் கிரகமாவார். குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த இரு கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. கஜகேசரி யோகத்தால் பலனடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.