வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு வகையான ஆற்றலுடன் தொடர்புடையது. வீட்டில் வைக்கும் சில பொருட்கள் நேர்மறை ஆற்றலையும், எதிர்மறை ஆற்றலையும் பரப்புகின்றன. உதாரணமாக சில சிலைகள், செடிகள், பூக்கள் வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அதே நேரத்தில் நின்று போன கடிகாரங்கள், உடைந்த பாத்திரங்கள், உடைந்த பொருட்களை வீட்டிற்குள் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை கொண்டுவரும் என கூறப்படுகிறது. சில சிலைகளை வீட்டில் வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த சிலைகள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை பெற்று தரும் என்றும், செல்வத்தை பெருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த சிலைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.