வேத ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் மங்களகரமான கிரகங்களாக அறியப்படுகின்றனர். குரு பகவான் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம், படிப்பு, அறிவு, உயர் கல்வி ஆகியவற்றின் காரகராகவும், சுக்கிர பகவான் அழகு, அன்பு, இன்பம், ஆடம்பர வாழ்க்கை, மகிழ்ச்சி, நிதி ஆதாயம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகின்றனர்.
இந்த இரண்டு சுப கிரகங்களும் பொதுவாக 60 டிகிரி கோணம் அல்லது 90 டிகிரி கோணத்தில் ஒன்றுக்கொன்று பார்வை பரிமாற்றம் செய்யும் பொழுது அல்லது இணையும் பொழுதோ உருவாகும் யோகமே ‘லாப திருஷ்டி யோகம்’ அல்லது ‘கேந்திர திஷ்டி யோகம்’ என்று அழைக்கப்படுகிறது.