
வேத ஜோதிடத்தில் குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் மங்களகரமான கிரகங்களாக அறியப்படுகின்றனர். குரு பகவான் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம், படிப்பு, அறிவு, உயர் கல்வி ஆகியவற்றின் காரகராகவும், சுக்கிர பகவான் அழகு, அன்பு, இன்பம், ஆடம்பர வாழ்க்கை, மகிழ்ச்சி, நிதி ஆதாயம் ஆகியவற்றின் காரகராகவும் விளங்குகின்றனர்.
இந்த இரண்டு சுப கிரகங்களும் பொதுவாக 60 டிகிரி கோணம் அல்லது 90 டிகிரி கோணத்தில் ஒன்றுக்கொன்று பார்வை பரிமாற்றம் செய்யும் பொழுது அல்லது இணையும் பொழுதோ உருவாகும் யோகமே ‘லாப திருஷ்டி யோகம்’ அல்லது ‘கேந்திர திஷ்டி யோகம்’ என்று அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 18 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைந்திருக்கிறார். நவம்பர் 2 ஆம் தேதி சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி அதிகாலை 4:44 மணிக்கு சுக்கிரனும், குருவும் ஒருவருக்கொருவர் 60 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக உருவாகும் லாப திருஷ்டி யோகம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)