கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. இந்த ராஜயோகம் கும்ப ராசியின் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிகழ இருக்கிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலைமை விரைவாக மேம்படும். சில காலமாக சந்தித்து வந்த பொருளாதார பிரச்சனைகள் தீரும்.
வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். வணிகம் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கும் சிறந்த காலகட்டம் அமையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகள் வழியாக நல்ல செய்திகளை கேட்பீர்கள்.
பரிகாரம்: குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, எலுமிச்சை சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது பலன்களை அதிகரிக்கும். சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு ஆகியவையும் பலன்களை கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)