ஜூலை 9, வியாழக்கிழமையன்று பல முக்கியமான சுப யோகங்கள் ஒரே நாளில் அமைவதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கஜகேசரி யோகம், துரூதார யோகம், சாம யோகம் மற்றும் ஹம்ச ராஜ யோகம் ஆகியவை உருவாகுவதால், சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் சனி தனது நட்சத்திர பாதத்தை மாற்றுவதும், சந்திரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதும் சிறப்பான கிரக அமைப்புகளை உருவாக்குகிறது. சந்திரனுக்கு 12-ஆம் இடத்தில் சனி மற்றும் 2-ஆம் இடத்தில் செவ்வாய் அமைவதால் துரூதார யோகம் ஏற்படுகிறது. அதேபோல், கடக ராசியில் இருக்கும் குரு ஹம்ச ராஜ யோகத்தை உருவாக்குவதுடன், சந்திரனுக்கு நான்காம் இடத்தில் இருப்பதால் கஜகேசரி யோகமும் அமைகிறது. மேலும், சூரியனிலிருந்து 11-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால் சாம யோகமும் உருவாகிறது. இந்த சுப கிரக அமைப்புகளால் அதிக நன்மை பெறக்கூடிய ராசிகள் குறித்து பார்ப்போம்.