Dream Astrology: கனவுத்தொல்லை இனி இல்லை.! சொப்பன சாஸ்திரம் சொல்லும் தீர்வுகள்.!

Published : Oct 16, 2025, 01:52 PM IST

சொப்ன சாஸ்திரத்தின் படி, எல்லா விபரீத கனவுகளும் கெடுதலை குறிப்பதில்லை. பாம்பு தீண்டுவது போன்ற சில கனவுகள் நன்மையையும், முன்னோர்கள், விலங்குகள் கனவில் வருவது நல்ல பலன்களை  சுட்டுகின்றன. தெளிந்த நீர், நகைகள் போன்ற கனவுகள் அதிர்ஷ்டத்தை தரும்.

PREV
13
சொப்ன சாஸ்திரம் சொல்லும் சேதி.!

நம்மில் பலருக்கு சில கனவுகள் நிம்மதியை கெடுக்கும், சில கனவுகள் நம்பிக்கையை தரும். ஆனால் சொப்ன சாஸ்திரம் சொல்வது என்னவென்றால் எல்லா விபரீத கனவுகளும் கெடுதலைக் குறிக்காது. சில கனவுகள் நல்ல பலன்களையும் தரக்கூடும்.

உதாரணத்திற்கு, நாகம் தீண்டுவது போல் கனவு காண்பது கெடுதல் நீங்கிவிட்டதைக் குறிக்கும். கஷ்டத்தில் சிக்குவது போல் வரும் கனவு, வாழ்க்கையில் உயர்வைக் குறிக்கும். மனச்சஞ்சலமான கனவுகளுக்கு பிறகு சிறிது தண்ணீர் பருகி, குலதெய்வத்தையும் இஷ்டதெய்வத்தையும் வணங்குவது நல்லது என சாஸ்திரம் கூறுகிறது.

23
தெரியாத கனவு ரகசியங்கள்.!

கனவில் முன்னோர்கள் தோன்றினால் அது ராகு-கேது பாவ நிலையை சொல்வதாகும். அவர்கள் பால், நெய், இனிப்பு போன்றவற்றைக் கேட்டால் அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆனால் அழுவது, சிரிப்பது போன்ற காட்சிகள் எச்சரிக்கையாகக் கொள்ளப்பட வேண்டும். தினமும் குலதெய்வத்துக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தால் பாதிப்பு விலகும்.

பறவை, விலங்குகள் சொல்லும் சேதி

கனவில் காக்கை, கழுகு, ஒட்டகம் போன்றவற்றைக் காண்பது அசுபம். கருடபகவானை மனதார வணங்குவது சிறப்பு. ஓடுவது, பாம்பு இறங்குவது, மிருகம் துரத்துவது போன்ற கனவுகள் வீண் விரயத்தைச் சுட்டும். இதற்கு பிள்ளையாருக்கு பாலபிஷேகம் செய்யலாம்.

33
நகைகள் காண்பது நிதி அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்

பல் விழுவது, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, விண்மீன் உதிர்வது போன்ற காட்சிகள் எதிர்மறை பலன்களைக் காட்டும். இவர்கள் பறவைகளுக்குத் தானியம் வைப்பது சிறந்த பரிகாரம். எதிரி கனவுகளில் தோன்றினால், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவது நல்லது என்கிறது சொப்பன சாஸ்திரம்.

தெளிந்த நீர் ஊற்றைக் காண்பது சுபம். கலங்கிய நீர் கஷ்டத்தைச் சுட்டும். அத்தகையோர் ஆலயங்களில் நீர், மோர் தானம் செய்யலாம். கனவில் நகைகள் காண்பது நிதி அதிர்ஷ்டத்தைக் குறிக்கும். ஞாயிறு அல்லது பெளர்ணமியில் அம்பாளுக்கு நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள் – கனவுகள் நல்ல பலன்களாக மாறும்.

Read more Photos on
click me!

Recommended Stories