கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் புதனின் சேர்க்கை நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் உருவாகிறது. ஜாதகத்தில் நான்காவது வீடு என்பது குடும்பம், தாயார், மன நிறைவு, உணர்ச்சிகள், நல்வாழ்வு ஆகியவற்றை குறிக்கிறது. இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக நீங்கள் இந்த காலகட்டத்தில் ஆடம்பர வசதிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள்.
பல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்கள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவி வழி உறவுகளுடன் உறவு மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)