Astrology by Date of Birth: சூரியன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இதனுடன் மேலும் இரண்டு ராஜ யோகங்கள் உருவாகியுள்ளதால் நான்கு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.
ஜோதிடத்தின்படி ஜூலை 28ஆம் தேதி வானில் ஒரு சக்தி வாய்ந்த கிரக சேர்க்கை நடைபெற்றது. சிம்ம ராசியில் குரு மற்றும் சூரியன் இருவரும் இணைந்தனர். இந்த சேர்க்கையால் குபேர யோகம் உருவாகியுள்ளது. இது 23ஆம் தேதி முதல் செயல்படுத்த தொடங்கினாலும், ஆடிப்பெருக்கு தினத்தில் வலுப்பெறத் தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் இணைவு சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது.
குபேர யோகத்துடன் வரிஷ்ட யோகம், விஷகம்ப யோகம், ப்ரீத்தி யோகங்களும் உருவாகியுள்ளன. மேலும் திரியேகாதச யோகமும் இணைந்துள்ளதால் மற்றொரு முக்கிய ஜோதிட நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய சுப யோகங்களால் நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சூரியன் மற்றும் குருவின் இணைவு மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்த இருக்கிறது. நீண்ட நாட்களாக நிலவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆடிப்பெருக்கு தினமான இன்று குருவின் பார்வை மேஷ ராசியின் மீது நேரடியாக பதிகிறது. இதன் மூலம் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து, மரியாதை உயரும். முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மிதுன ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை அள்ளி வழங்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றியைப் பெறும். வெளிநாட்டு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், பொருளாதார ஸ்திரத்தன்மையும், வளமும், வருமானத்திற்கான புதிய வழிகளும், ஆதாரங்களும் உருவாகும்.
சிம்ம ராசியின் அதிபதியே சூரிய பகவான் என்பதால் இந்த சேர்க்கை சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிக தைரியத்தையும், ஆளுமைத் திறனையும் தரும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரலாம். மேலும் அடுத்த சில வாரங்கள் உங்களுக்கு பொற்காலமாக அமையும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முதலீடுகள் மூலம் நீண்ட கால லாபம் கிடைக்க வழி பிறக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் காரணமாக பண வரவு பெருகும். ஆன்மீகம் மற்றும் தொண்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் தன லாபம் அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நல்ல முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பு மற்றும் நேர்மை காரணமாக பொருளாதாரத்தில் உன்னதமான நிலையை அடைவீர்கள்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.