ஜோதிடத்தில் செவ்வாய் அங்காரகன் எனப்படுகிறார். இவர் தைரியம், வீரம், ஆற்றல், ஆக்ரோஷத்திற்கு அதிபதியாவார். சனி பகவான் நிதானம், நீதி மற்றும் கர்மாவிற்கு அதிபதியாவார். இந்த இரு முரண்பட்ட ஆற்றல்கள் ஒரே ராசியில் இணைவது சமூகத்திலும், தனிநபர் வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும்.
தேவையற்ற ஆக்ரோஷம், பிடிவாதம் அதிகரிக்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் ஏற்படலாம். உடல்நலம், பேச்சு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காணலாம்.