மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பௌர்ணமி தினத்தில் மனக்குழப்பங்கள் சற்று அதிகமாக இருக்கும். குழப்பமான மனநிலை இருப்பதால் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலைகளில் அதிக பரபரப்பு காணப்படும். எனவே நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.
கடகம்: உணர்ச்சி மற்றும் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வழக்கமான செயல்களில் இருந்து பின்வாங்க வேண்டிய சூழல்கள் ஏற்படலாம். அதிக உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். கனவுகளை நோக்கிய பயணத்தில் தடைகள் வரலாம். சுய சிந்தனை செய்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். அவர்களுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போகலாம். எனவே பணியிடத்திலும், குடும்பத்திற்கும் இடையே சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)